வலுவிழக்கப் போகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி? மழை குறையுமா? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (09:36 IST)

வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அது மெல்ல வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

 

வங்க கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. ஆனால் இது புயலாக மாறுவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளதாக கூறப்பட்டது.

 

தொடர்ந்து தென்மேற்கு பகுதியில் நகர்ந்து வந்த இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்ந்து மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் வட தமிழக மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான அளவில் மழையும், ஆந்திரா பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

ஒரு பெண்ணின் ஒரு நாள் உரிமை என்பது வெறும் ரூ.33 தானா? ரூ.1000 உரிமை தொகை குறித்து நந்தகுமார் கேள்வி..!

வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் படம்: அதிருப்தியில் புறக்கணித்த காங்கிரஸ்!

சோத்த திங்கிறியா இல்ல... இந்து அமைப்பினரிடம் கடுப்பாகி கத்திய சேகர் பாபு!...

அடுத்த கட்டுரையில்
Show comments