வலுவிழக்கப் போகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி? மழை குறையுமா? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (09:36 IST)

வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அது மெல்ல வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

 

வங்க கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. ஆனால் இது புயலாக மாறுவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளதாக கூறப்பட்டது.

 

தொடர்ந்து தென்மேற்கு பகுதியில் நகர்ந்து வந்த இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்ந்து மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் வட தமிழக மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான அளவில் மழையும், ஆந்திரா பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி - 18 பேருக்கு தீவிர சிகிச்சை!

சென்னை பேருந்தில் முதியவர் அடித்துக்கொலை!.. இளைஞர் கைது..

மே 1ம் தேதி முதல் வெயில் கொளுத்தும்!.. பிரதீப் ஜான் எச்சரிக்கை..

முன்னணி நிறுவனத்தின் எக்சிட்போல் கசிவு.. அதிமுக 140.. தவெக 60.. திமுக 30.. மற்றவை 4.. இதுதான் உண்மையாகவே ரிசல்ட்டா?

2026-2027-ஆம் கல்வியாண்டில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் மும்மொழி கட்டாயம்: தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments