கைக்குட்டையால் முகத்தை துடைப்பது கூட குற்றமா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

Prasanth K
வியாழன், 18 செப்டம்பர் 2025 (12:03 IST)

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடி பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடிக் கொண்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்த நிலையில் அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

 

சேலம் மாவட்டம் ஓமலூரி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி என்னை விமர்சனம் செய்து வருகிறார். அவர்கள் எதிர்கட்சியாக இருந்தபோது பிரதமர் வந்தபோது கருப்புக்கொடி காட்டினார்கள். இப்போது வெள்ளைக் குடை பிடித்து வரவேற்கின்றனர். 

 

துணை குடியரசு தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து சொல்லவும், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவும் அரசாங்க காரிலேயேதான் சென்றேன். உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது கைக்குட்டையால் முகத்தை துடைத்தேன். அதை எடுத்து வைத்துக் கொண்டு அரசியல் செய்வது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது” என கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

அடுத்த கட்டுரையில்
Show comments