இரும்புத்திரை' இயக்குனரின் தாய் சஸ்பெண்ட்: தமிழக அரசு அதிரடி

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (09:46 IST)
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு குறித்த வழக்கு ஒன்றில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர்  கவிதா என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டது தெரிந்ததே.

தற்போது கவிதா ஜாமீனில் வந்துள்ள நிலையில் இவரை இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட கவிதா என்பவர் விஷால் சமந்தா நடித்த 'இரும்புத்திரை' படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு அரசு அதிகாரி குற்றவழக்கில் கைது செய்யப்பட்டால் 48 மணி நேரத்திற்குள் அவரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்ற விதி இருக்க அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் கவிதாவுக்கு சாதகமாக செயல்பட்டார். இந்த நிலையில் நீதிமன்றத்தின் கேள்விக்கு பின்னர் தற்போது கவிதா முன் தேதியிட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments