Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஏஎஸ் தேர்வில் காப்பியடிக்க உதவிய மனைவி ஒன்றரை வயது குழந்தையுடன் கைது

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (12:12 IST)
சமீபத்தில் நடந்த ஐஏஎஸ் முதன்மை தேர்வில் கலந்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி சபீர்கரீம் புளூடூத் மூலம் நூதன முறையில் காப்பியடித்தபோது பிடிபட்டு கைது செய்யப்பட்டார். இவர் காப்பியடிக்க உதவியதாக இவருடைய மனைவி ஜாய்சி மற்றும் ஐஏஎஸ் பயிற்சி மையம் நடத்தி வரும் பேராசிரியர் ராம்பாபு ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது



 
 
இந்த நிலையில் நேற்று ஜாய்சி, ராம்பாபு ஆகியோர்களை கைது செய்ய தமிழக காவல்துறையினர் ஐதராபாத் சென்றனர். ஜாய்சி தன்னுடைய ஒன்றரை வயது மகனுடன் கைது செய்யப்பட்டார். ஒன்றரை வயது மகனுடன் அவரை நீதிமன்றத்தில் போலிசார் ஆஜர்படுத்தினர்.
 
ஜாய்சி மற்றும் ராம்பாபு ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் எந்த பாவமும் அறியாத ஒன்றரை வயது கைக்குழந்தையும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் சபீர்கரீம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரது ஐபிஎஸ் அந்தஸ்து ரத்து செய்யப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments