Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓசூரில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலை: அமைச்சர் தங்கம் தென்னரசு

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (14:41 IST)
ஓசூரில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை அமைக்க இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய தொழிற்சாலைகள் அதிகம் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை தமிழகத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அமைய இருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார். 
 
இந்த தொழிற்சாலையில் 60 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் பணியாற்றும் வகையில் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் இந்த தொழிற்சாலைக்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்த தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட்டால் ஏராளமான தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதும் தமிழகம் தொழில் துறையில் முன்னேற்றம் அடையும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments