கோடநாடு வீடியோ விவகாரம்: மேத்யூ மீதான விசாரணைக்கு தடை; நீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (12:26 IST)
கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக மேத்யூ மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ ஒரு திட்டமிட்ட சதி என்று கூறி மேத்யூ மீது வழக்கு தொடரப்பட்டது. தன் மீது வழக்கு தொடரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேத்யூ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேத்யூ சார்பில் வீடியோ வெளியீட்டில் எந்த சதியும் இல்லை எனவும் எந்த உள்நோக்கத்திலும் இந்த வீடியோவை வெளியிடவில்லை என கூறப்பட்டது.
 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மேத்யூ மீதான வழக்கை விசாரிக்க 4 வாரத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி திரைப்படங்கள், பாடல்களுக்கு தடை: மசோதா கொண்டு வர தி.மு.க. அரசு பரிசீலனையா?

மீண்டும் ஒரு பல்க் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கும் அமேசான்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments