Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடநாடு வீடியோ விவகாரம்: மேத்யூ மீதான விசாரணைக்கு தடை; நீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (12:26 IST)
கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக மேத்யூ மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ ஒரு திட்டமிட்ட சதி என்று கூறி மேத்யூ மீது வழக்கு தொடரப்பட்டது. தன் மீது வழக்கு தொடரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேத்யூ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேத்யூ சார்பில் வீடியோ வெளியீட்டில் எந்த சதியும் இல்லை எனவும் எந்த உள்நோக்கத்திலும் இந்த வீடியோவை வெளியிடவில்லை என கூறப்பட்டது.
 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மேத்யூ மீதான வழக்கை விசாரிக்க 4 வாரத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments