Publish Date: Fri, 06 Oct 2023 (13:50 IST)
Updated Date: Fri, 06 Oct 2023 (13:53 IST)
பகுதி நேர ஆசிரியர்கள், டெட் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது.
எனவே இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடை நிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்,.
தமிழக அரசு 3 மாதங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.