Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரே அடங்குனாலும் அம்மா உணவகத்துக்கு நோ ரெஸ்ட்!!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (11:46 IST)
நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். 
 
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நாளை ஊரடங்கை செயல்படுத்துமாறு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்று தமிழகம் முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது. 
 
அரசு சார்ப்பில் தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகள், மெட்ரோ நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கமும் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. பால் விநியோகிஸ்தர்களும், கோயம்பேட் சந்தை சங்கமும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க உள்ளது. டாஸ்மாக் கடைகளும் நாளை மூடப்படும். 
 
ஆனால், சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் பொதுமக்கள் நலன் கருதி அம்மா உணவகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

க்ரீன் கார்டு வைத்திருந்தாலும் வெளியேற்றலாம்.. அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் அதிர்ச்சி..!

தொடர் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

டாடா, அம்பானி கூட செய்யாத சாதனை.. ஒரே நேரத்தில் 50000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments