Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. உறுதி செய்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

Siva
புதன், 22 மே 2024 (10:00 IST)
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்று ஏற்கனவே இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

இந்த றைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும் என்றும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மிகவும் அரிதாகவே கோடை காலத்தில் அதுவும் மே மாதத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றும் என்ற நிலையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு

சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை செய்யும் சிபிஐ அதிகாரிகள்.. என்ன காரணம்?

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments