Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் கூட போடாமல் ரத்தானது இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 போட்டி.. ரசிகர்கள் அதிருப்தி

டாஸ் கூட போடாமல் ரத்தானது இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 போட்டி.. ரசிகர்கள் அதிருப்தி
, திங்கள், 11 டிசம்பர் 2023 (06:36 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே நேற்று டர்பன் நகரில் முதலாவது டி20 போட்டி நடக்க இருந்த நிலையில் இந்த போட்டி டாஸ் கூட போடாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
 
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி விளையாட உள்ளது. முதல் போட்டி நேற்று டர்பன் நகரில் நடக்க இருந்த நிலையில் டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மழை பெய்தது. 
 
மழை நின்றவுடன் டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் கடைசிவரை மழை விடவில்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. 
 
இதனால் டாஸ் கூட போடாமல் நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர் இந்த நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி  நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது.. மின்சார ரயில்கள் தாமதமாக வாய்ப்பு..!