Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

Siva
வியாழன், 27 மார்ச் 2025 (13:28 IST)
இந்தியா - ரஷ்யா கடற்படைகளின் கூட்டு பயிற்சிக்காக, ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்தை வந்தடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து நடத்தும் கடற்படை பயிற்சி முதன்முதலாக 2003ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த 20 ஆண்டுகளாக இந்த கூட்டுப் பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
இந்த ஆண்டுக்கான கூட்டுப்பயிற்சி சென்னை கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக, ரஷ்யாவின் பசுபிக் பெருங்கடல் அணியில் சேர்ந்த போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்தை வந்துசேர்ந்துள்ளன.
 
இந்த பயிற்சி இரண்டு முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், இந்திய-ரஷ்ய கடற்படை அதிகாரிகள் இணைந்து செயல்படும் முறைகள் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர். இதில் விளையாட்டு போட்டிகள், கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செயல்பாடுகளும் இடம்பெற உள்ளன. இரண்டாம் கட்டமாக, அடுத்த வாரம் வங்களா விரிகுடா கடலில் இருநாடுகளின் போர்க்கப்பல்கள் ஒருங்கிணைந்த பயிற்சியில் பங்கேற்கவுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments