Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பிரதமரும், மத்திய அரசும் சரியான முடிவை எடுத்துள்ளன. கிரீஸில் கனிமொழி பேச்சு..!

Siva
வியாழன், 29 மே 2025 (09:17 IST)
இந்தியா மற்றும் கிரீஸ் இடையிலான நாடுகடந்த பயணத்தில் அனைத்து கட்சி பிரதிநிதி குழுவை தலைமை தாங்கும் திமுக எம்பி கனிமொழி  “தனிநபர்கள் நடத்திய தீவிரவாத தாக்குதலுக்கும், ஒரு நாட்டின் ஆதரவுடன் நடத்தப்படும் தீவிரவாதத்திற்கும் இந்தியா இனிமேல் வேறுபாடு காணாது” என்று தெரிவித்தார்.
 
கிரீஸில் உள்ள இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்து உரையாற்றிய அவர், “பல ஆண்டுகளாக இந்தியா அனுபவித்துவந்த துன்பங்களை தொடர்ந்து, இனிமேல் இதையெல்லாம் தடுக்க வேண்டும் என்ற உறுதியுடனும், எல்லைதாண்டி தீவிரவாதத்துக்கு எதிராக ஒருமித்தமான பார்வையுடனும் அரசு செயல்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
 
“இந்திய பிரதமர் மற்றும் மத்திய அரசு உலக நாடுகளுடன் உறவை விரிவாக்க முடிவெடுத்துள்ளது. எங்கள் குழுவில்,  பிரஜேஷ் சௌத்தாவை தவிர மற்ற அனைவரும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். ஒரே மாதிரியான தீவிரவாதத்தின் எல்லா வடிவங்களுக்கும் எதிராக இந்தியா நிறைவேற்றியுள்ள புதிய நிலைப்பாட்டை இந்நாட்டு பிரதமரும், அரசும் தெளிவாக அறிவித்துள்ளன. 
 
இந்த குழுவில் திமுகவின் கனிமொழி, சமாஜ்வாடி கட்சியின் ராஜீவ் ராய், ஜம்மு காஷ்மீர் நேஷனல் கான்பிரன்சின் மியான் அல்தாஃப் அஹ்மத், பாஜகவின் பிரஜேஷ் சௌத்தா, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி கட்சியின் அசோக் மித்தல் ஆகியோர் உட்பட, முன்னாள் தூதர்கள் மஞ்சீவ் எஸ்.பி. புரி மற்றும் ஜாவேத் அஷ்ரஃப் ஆகியோரும் உள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செங்கோடு உள்பட 11 நகராட்சிகளின் தரம் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments