Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் நடைபெற்று வந்த ஐடி ரெய்டுகள் நிறுத்தம்: எஸ்பி அலுவலகத்தில் அதிகாரிகள் தஞ்சம்..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (12:14 IST)
கரூரில் நடைபெற்று வந்த ஐடி ரெய்டுகள் திடீரென நிறுத்தப்பட்டதாகவும் ரெய்டு செய்ய வந்த அதிகாரிகள் கரூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரூரில் உள்ள செந்தில் பாலாஜி சகோதரர் வீடு உள்பட ஒரு சில இடங்களில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்துவதற்கு திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
மேலும் ஒரு வருமானவரித்துறை அதிகாரியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த ஐடி ரெய்டுகள் நிறுத்தப்பட்டதாகவும் 8 வாகனங்களில் வந்த அதிகாரிகள் கரூர் எஸ் பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஐடி ரெய்டுக்கு வந்த அதிகாரிகள், ரெய்டை நிறுத்திவிட்டு காவல்துறை அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments