Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

Advertiesment
income tax raid
, செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (08:17 IST)
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
 
சென்னையில் மணலி, அண்ணாநகர் பகுதிகளில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாகவும், சென்னை, அண்ணாநகரில் உள்ள அசோக் ரெசிடென்சி வீட்டின் உரிமையாளர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீரில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்.. பயங்கரவாத சதியா?