500, 1000 நோட்டுகளை வைத்து சொத்து வாங்கிய சசிகலா! – வருமானவரித்துறை அறிக்கை!

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (13:04 IST)
சிறைதண்டனை அனுபவித்து வரும் சசிகலா வாங்கி குவித்த சொத்துக்கள் குறித்த அறிக்கையை வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா. இந்நிலையில் அவர் வாங்கி குவித்த சொத்துக்கள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா பல்வேறு சொத்துகள் வாங்கியுள்ளது தெளிவாகியுள்ளது. இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம், சர்க்கரை ஆலை, காகித ஆலை மற்றும் ஒரு ரிசார்ட் என பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை சசிகலா வாங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments