Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி: சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு?

வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி: சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு?

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (14:16 IST)
சசிகலா, தினகரன் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் என வருமான வரித்துறை 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தின. இந்த சோதனையில் சசிகலா குடும்பத்தினர் வசமாக சிக்கியுள்ளதாகவும், இதன் அடுத்தக்கட்டமாக சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.


 
 
180-க்கும் அதிகமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சமீபத்தில் நடந்த ரெய்டுகளிலேயே இது தான் மிகப்பெரியது என்று சொல்லப்படுகிறது. ஜெயா டிவி அலுவலகம், கொடநாடு எஸ்டேட் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை ஆகியவற்றிலும் சோதனை நடத்தியது வருமான வரித்துறை.
 
இளவரசியின் மகன் விவேக்குக்கு சொந்தமான வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் பற்றி வருமான வரித்துறையினர் குடைச்சல் கொடுத்தனர். 2015 ஆம் ஆண்டு வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. அந்த தியேட்டர்களை ரூ.1000 கோடிக்கு இளவரசியின் மகன் விவேக் விலைக்கு வாங்கினார் என அப்போதே குற்றம் சாட்டப்பட்டது.
 
ஆனால், தியேட்டர்களை விலைக்கு வாங்கவில்லை, 5 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ளதாக பதில் அறிக்கை விடப்பட்டது. இது மட்டுமின்றி விவேக் கட்டுப்பாட்டில் மொத்தம் 136 தியேட்டர்கள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து ஜாஸ் சினிமா தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்க ரூ.1000 கோடி பணம் எப்படி வந்தது என விவேக்கிடம் சரமாரியாக கேள்வி கேட்கப்பட்டது.
 
ஜாஸ் சினிமாஸ் மூலம் கருப்பு பணம் மாற்றப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விவேக் ஜெயா டிவி சிஇஓ-வாக உள்ளார். இவர் நிர்வகித்து வந்த 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சசிகலா குடும்பத்தை குறிவைத்து நடந்த சோதனையில் பல ஆயிரம் கோடிகள் ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த சோதனை தற்போது ஓய்ந்துள்ளநிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் 187 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments