Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வருமான வரித்துறை சோதனை..! கட்டு கட்டாக பணம் பறிமுதல்..!!

Senthil Velan
வியாழன், 18 ஏப்ரல் 2024 (12:38 IST)
சென்னையில்  வரிமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
சென்னை பள்ளிக்கரணை அருகே துரைப்பாக்கம்-பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில்
உள்ள பி.எல்.ஆர். புளு மெட்டல்ஸ் என்ற ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனி மற்றும் ஜல்லி,  மணல் விற்பனை செய்யும் நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த சோதனை அதிகாலை வரை நடைபெற்றது.
 
இந்த சோதனையில்,  கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த நிறுவனம் பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.  
 
இந்த சோதனையில் பணம் சிக்கியதும்,  இதனைத் தொடர்ந்து லிங்கராஜ் வீடு,  குவாரி என அவருக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் சேர்த்து, மொத்தமாக ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.   

ALSO READ: ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்..! தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு..!!

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments