Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் ஒரே நாளில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க வில் இணைந்தனர்.

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (22:39 IST)
கரூரில் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் ஒரே நாளில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க வில் இணைந்தனர். காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அமமுக நிர்வாகிகள் என்று ஏராளமானோர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைந்தனர்.

கரூர் மாவட்ட அ.தி.மு.க கழக செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில், கரூர் ஒருங்கிணைந்த நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செளந்தர்ராஜன், கரூர் காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் அர்ஜுனன், கரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகி சுரேஷ்குமார் சுமார் 30 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கரூர் நகர மத்திய அ.தி.மு.க கழக செயலாளர் வை.நெடுஞ்செழியன் தலைமையில் அ.தி.மு.க கட்சியில் இணைந்தார்.

இதே போல, கரூர் வடக்கு நகர அ.தி.மு.க செயலாளர் பாண்டியன் தலைமையில், ராமனுஜம் நகர் 3 வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க வில் இணைந்தனர். இதே போல, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் முன்னிலையில், அப்பகுதியினை சார்ந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க வில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைந்தனர். இதே போல, கரூர் மாவட்ட அளவில் பல்வேறு கட்சிகளில் இருந்து இன்று மாலை ஒரே நாளில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க வில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments