இணைய சேவை முடக்கம்: தத்தளிக்கும் கப்பல்கள்!

Webdunia
வியாழன், 24 மே 2018 (19:55 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால் நேற்று முதல் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. 
 
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், போராட்டம் குறித்த எந்த ஒரு தவறான செய்தியும் வெளியாககூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கபப்ட்டது. ஆனால், மாணவ, மாணவிகள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவு செய்யமுடியாமல் திணறி வருகின்றனர் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியது.
 
இந்நிலையில், தற்போது இணையதள சேவை முடக்கப்பட்டதால் கப்பல்கள் துறைமுகம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5 சரக்கு கப்பல்கள் துறைமுகம் வரமுடியாமல் திணறியுள்ளன.
 
இதனால் தூத்துக்குடி துரைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை எப்பொழுது வழங்கப்படும் என தெரியாத நிலையில், சென்னை, கொச்சி வழியாக போக்குவரத்தை மேற்கொள்ள முயற்சி செய்யப்பட்டு வருகிறதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

மேற்கூரை அமைக்க வேண்டும்.. புறப்படும் நேரம், வரும் வழி, வரும் நேரம் தெரிவிக்க வேண்டும்: தவெகவுக்கு நிபந்தனை..!

டிசம்பர் 18ல் நடைபெறும் ஈரோடு கூட்டத்தில் கூட்டணியை அறிவிக்கின்றாரா விஜய்? காங்கிரஸ் யார் பக்கம்?

7 பேருந்துகள், 3 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியது.. பனி மூட்டத்தால் டெல்லி அருகே பயங்கர விபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments