Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மறக்க முடியவில்லை: கதறி அழும் விஜய்

மறக்க முடியவில்லை: கதறி அழும் விஜய்
, சனி, 22 டிசம்பர் 2018 (18:20 IST)
சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார்.  
 
பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் அபிராமி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. 
 
இது குறித்து அபிராமியின் கணவர் விஜய் கூறியது பின்வருமாறு, அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதை டிவி, பேப்பரில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். 
 
நான் தனியாகவே வசித்து வருகிறேன். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை. என் குழந்தைகளின் நினைவோடு அவர்களை மறக்க முடியாமல் வாழ்ந்து வருகிறேன் என்று தீராக் கண்ணீரோடு வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 மாநில தேர்தல்: வாரி இறைத்த கோடிகள் எவ்வளவு தெரியுமா?