Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண்டிபட்டிக்கு இதெல்லாம் செய்வேன்... பிரசாரத்தை ஆரம்பித்த உடன்பிறப்பு!

ஆண்டிபட்டிக்கு இதெல்லாம் செய்வேன்... பிரசாரத்தை ஆரம்பித்த உடன்பிறப்பு!
, செவ்வாய், 19 மார்ச் 2019 (08:19 IST)
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் உடன் பிறந்த அண்ணண் தம்பிகள் அ.தி.மு.க மற்றும் தி.மு.க சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

 
ஒரு குடும்பத்துக்கே இரண்டு கட்சிகளும் சீட் கொடுத்துள்ள சம்பவத்தை பார்த்து தமிழக மக்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர். 
 
இந்நிலையில், நேற்று ஆண்டிபட்டி தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மகாராஜன் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மகாராஜன், "ஜவுளிப்பூங்கா திட்டத்தை ஆண்டிபட்டியில் செயல்படுத்துவேன், , ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள 45 கண்மாய்களுக்குத் தண்ணீர் கொண்டுவரப்படும். அதற்காக முல்லைப்பெரியாறு ஆற்றிலிருந்து குழாய் மூலம் ஆண்டிபட்டிக்கு தண்ணீர் கொண்டுவருவேன். அண்ணன், தம்பியாக இருந்தாலும் நான் வேற கட்சி, அவரு வேற கட்சி, இதுல சொல்றதுக்கு வேறு எதுவும் இல்லை என கூறிவிட்டு பிரசாரத்தை தொடர்ந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவிடம் விருப்பமனு கொடுத்த பிரமுகர் யார் தெரியுமா?