Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோண்ட தோண்ட சிலைகள்: அம்பலமாகும் ரன்வீர்ஷாவின் ரகசியங்கள்

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (11:42 IST)
கிண்டியில் உள்ள ரன்வீர்ஷாவின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சிலை கடத்தல் சிறப்புப் பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
 
சமீபத்தில் சிலைக்கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிபதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தபோது விலைமதிப்புள்ள பழங்கால கோவில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. 
 
மேலும் அவரது பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ரெய்டில் எராளமான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை இவரிடம் இருந்து 247 சிலைகள் கண்டுபிடிக்கப்படிருப்பதாக தெரிகிறது. ஒரு கோவிலையே மொட்டை அடித்தது போல் ஏராளமான சிலைகள், தூண்கள் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு, கிண்டியில் உள்ள ரன்வீர்ஷாவின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் விழாக்காலங்களில்  தேர்களில் பயன்படுத்தும்  கருடன், நந்தி உள்ளிட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments