Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’ஜெயலலிதா சொன்னால் பதவியை ராஜினாமா செய்வேன்’ - சசிகலா புஷ்பா அதிரடி

’ஜெயலலிதா சொன்னால் பதவியை ராஜினாமா செய்வேன்’ - சசிகலா புஷ்பா அதிரடி
, திங்கள், 26 செப்டம்பர் 2016 (19:25 IST)
ஜெயலலிதா கேட்டுக்கொண்டால் எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
 

 
திருச்செந்தூர் அருகே உள்ள வெங்கடேச பண்ணையாரின் நினைவிடத்தில், அவரது 13வது நினைவு நாளை முன்னிட்டு சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முதலமைச்சர் கேட்டுக்கொண்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுத்துவிடலாம். அவர்களுக்கு பின்னால் இருக்கும் இன்னொரு கும்பலுக்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
 
முதலமைச்சர் வயதில் பெரியவர். அதனால் எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் பின்னால் இருந்து ஆட்டி வைப்பவர்களை முதலமைச்சர் தெரிந்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்கள் குடும்பத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்மரம் கடத்தல் ; திருப்பதி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு : 4 தமிழர்கள் கைது