Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர்கள் உயிரிழந்தால் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர் பழனிசாமி

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (17:10 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில்,  கொரொனா தடுப்புக்காக பணியாற்றி வரும் மருத்துவத்துறை, போலீஸார், உள்ளாட்சித் துறை மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறைப்பணியாளர்களும் வைரஸால் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி உதவியும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு  தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரொனா தடுப்பு பணியிலுள்ள தனியார் மற்றும் அரசுத் துறையில் இருந்து உயிரிழப்பு நேர்ந்தால், அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அவர்களின் உடலை பாதுக்காப்புடன் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். கொரோனா தடுப்பு பணியில் உள்ள அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் இப்பணியில் உள்ள பிற துறை அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் இப்பணியில் ஈடுபட்டு உயிரிழக்க நேரிடும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு உரிய விருதுகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments