Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்: கே.எஸ்.அழகிரி நம்பிக்கை

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (15:30 IST)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மாதவராவ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
 
அவருடைய மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். தேர்தல் நடந்து முடிவு அறிவிக்கும் முன்னரே ஒரு வேட்பாளர் கொரோனாவால் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடக்கும் என்றும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் சற்று முன் பேட்டியளித்த காங்கிரஸ் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவ் தான் ஜெயிப்பார் என்றும் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் என்றும் மீண்டும் இடைத் தேர்தல் நடந்தால் காங்கிரஸ் வேட்பாளர் தான் போட்டியிடுவார் என்றும் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments