Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம்! – பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை!

Prasanth Karthick
வெள்ளி, 21 ஜூன் 2024 (13:28 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.



கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்த 49 பேர் பலியான நிலையில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாரயத்தை முழுவதுமாக ஒழிக்க வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அதில் அவர் “கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கான கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். யோகா செய்வதன் மூலம் குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு எடுக்கலாம். தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கு கடினம்தான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியமாகும். ஆனால் கள்ளுக்கடைகளும் அரசின் தீவிர கண்காணிப்பில் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Editb by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments