Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.. முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
Stalin

Siva

, ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (07:25 IST)
மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி தர முடியாது என மத்திய கல்வி அமைச்சர் பேசியதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  தனது சமூக வலைத்தளத்தில் ’இதுபோன்று திமிராக பேசினால் தமிழர்களின் தனி குணத்தையும்  டெல்லி பார்க்க வேண்டி இருக்கும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முதல்வர் தனது பக்கத்தில் கூறி இருப்பதாவது:

"They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?

மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!  

"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!

எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!