Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களை முதலாளி ஆக்கிய சென்னை ஐடி நிறுவனம்.. 33% பங்குகள் பகிர்ந்து அளிப்பு..!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (09:24 IST)
சென்னையை சேர்ந்த ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 33% பங்குகளை பிரித்து கொடுத்து முதலாளி ஆக்கியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளமே சரியாக தராத நிலையில் சென்னை சேர்ந்த ஐடியா 2 என்ற நிறுவனம் பணி மூப்பு அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தங்கள் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த 38 பேருக்கு 33 சதவீத பங்குகளை ஒதுக்கி நிறுவனத்தின் பங்குதாரர்களாக ஆக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்த 38 பேரும் ஊழியர்கள் மட்டுமின்றி நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்பதால் முதலாளி ஆகியுள்ளனர்.

அதேபோல் சிறப்பாக பணியாற்றிய 50 பேரை தேர்வு செய்து அவர்கள் விரும்பிய காரை பரிசளித்தது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் 100 பேருக்கு கார்கள் வழங்க இருப்பதாகவும் சில குறிப்பிட்ட ஊழியர்களுக்கு பங்குகளை ஒதுக்க இருப்பதாகவும் ஐடியா 2 நிறுவனம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments