Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல் பிடுங்கிய சம்பவத்தின் விசாரணை.. உளவுப்பிரிவு காவல்துறையினரை வெளியேற்றிய அமுதா ஐ.ஏ.எஸ்..!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (13:38 IST)
அம்பாசமுத்திரத்தில் பல் புடுங்கிய விவகாரம் குறித்து விசாரணையை ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா நடத்திவரும் நிலையில் காவல்துறையினரை வெளியேற்றி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது குறித்து  புகார் எழுந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு அனுமதியை மறுத்துள்ளார். 
 
வட்டாட்சியர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த உளவுப்பிரிவு காவல் துறையினர்களை வெளியேற்ற அவர் உத்தரவிட்டார். காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்று ஐஏஎஸ் அதிகாரி அமுதா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 
 
இதனை அடுத்து விசாரணை நடைபெறும் இடத்தில் காவல்துறை அதிகாரிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments