Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்: சசிகலா புஷ்பா திட்டவட்டம்

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (15:12 IST)
அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலா புஷ்பா. இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
இன்று மாநிலங்களவையில் இது குறித்து பேசிய சசிகலா புஷ்பா நடந்த சம்பவத்துக்கு திருச்சி சிவாவிடமும், திமுக தலைவர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும் தனது பாதுகாப்பு இல்லை எனவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார்.
 
கட்சி தலைமை தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாக கூறிய சசிகலா புஷ்பா, அவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 32 மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை தொடர் அட்டகாசம்..!

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments