Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'' நான் வந்துவிட்டேன் ''பிறந்தவுடன் பேசிய குழந்தை....மக்கள் ஆச்சர்யம்

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (23:04 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை ஒன்று சில  நிமிடங்களிலேயே பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள சின்ன அழிசூர்கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சந்திரன். இவரது மனைவி ரேவதி.

இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக ரேவதி கர்ப்பமடைந்தார்.

நிறைமாத கர்ப்பிணியாக ரேவதிக்கு நேற்று காலை 8 மணியளவில் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

எனவே அவரை களியாம்பூண்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு, காலை 10 மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சுகப் பிரசவமாகப் பிறந்த அக்குழந்தை 2.9 கிலோ எடையுடன் பிறந்ததாகவும்,  குழந்தை பிறந்தவுடன் நான் வந்துவிட்டேன் என்று பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், மருத்துவர்கள், குழந்தை பேசியதுபோல் அவர்களின் காதில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments