Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் பாட்டு வரிகளை நீ சொல்லச் சொல்லப் பரவசமானேன் மகளே - வைரமுத்து டுவீட்

vairamuthu
, வியாழன், 13 அக்டோபர் 2022 (14:26 IST)
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளை பிரபல நடிகை கூறியதற்கு, என் பாட்டு வரிகளைநீ சொல்லச் சொல்லப் பரவசமானேன் என  வைரமுத்து டுவீட் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் வைரமுத்து இதுவரை 7 ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்பாடல்கள் எழுதியுள்ளார். இதுவரை 7 தேசிய விருதுகள் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஒவ்வொரு பாடலிலும் அவரது எழுத்துகளுக்கு தனிச்சிறப்பு இருக்கும்.,இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்,  தேவா உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து அவர் இயற்றிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை சம்யுக்தா மேனன், சமீபத்தில் மலையாள சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது தனக்கு கவிதை பிடிக்கும் என்றும், குறிப்பாக  கவிஞர் வைரமுத்து – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் எழுதிய, காற்றேன் என் வாசல் வந்தாய் ( ரிதம்), வெண்ணிலவே வெண்ணிலவே( மின்சார கனவு), பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்( ஜீன்ஸ்), கொஞ்சும் மைனாக்களே( கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) ஆகிய பாடல்கள்  தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து, கவிஞர் வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில்,

''மலையாளம்
நனைந்த தமிழில்
என் பாட்டு வரிகளை
நீ சொல்லச் சொல்லப்
பரவசமானேன் மகளே

தமிழும் மலையாளமும்
உறவு மொழிகள்

நாம்
கலையால் ஒன்றுபடுவோம்;
காலத்தை வென்றுவிடுவோம்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் கண்டக்டர்கள்: பெங்களூர் மக்கள் அதிருப்தி!