Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுதி பக்கமே போகல, அதனால் திருவாடனையில் போட்டியில்லை: கருணாஸ்

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (20:04 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக தொகுதி பக்கமே செல்லவில்லை என்பதால் மீண்டும் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை என கருணாஸ் வெட்டவெளிச்சமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை  என்ற அமைப்பின் மூலம் நடிகர் கருணாஸ் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார் அந்த தொகுதியில் அபார வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என கருணாஸ் பேட்டியளித்துள்ளார்
 
கடந்த இரண்டு வருடங்களாக தொகுதி பக்கமே நான் செல்லவில்லை என்பதால் மீண்டும் நான் திருவாடனை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று அவர் வெட்டவெளிச்சமாக கூறியுள்ளார் 
 
மேலும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த கட்சியுடனும் தோழமையாக இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய சொந்த தொகுதிக்கு கடந்த இரண்டு வருடங்களாக செல்லாமல் இருக்கும் கருணாசுக்கு ஒரு பக்கம் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர் தனது தவறை வெட்டவெளிச்சமாக ஒப்புக் கொண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டி இல்லை என்று கூறி அவருடைய கள்ளங்கபடமில்லாத மனதை ஒரு சிலர் பாராட்டி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments