Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்கு வந்துவிட்டேன்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

Webdunia
ஞாயிறு, 11 மார்ச் 2018 (16:58 IST)
ஊழலை என்று எதிர்த்தேனோ அன்றே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் விவசாயிகள் கருத்தரங்கம் ஒன்றில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, 'என்னுடைய சமூகம் என்றைக்கு விழிப்பு பெறுகின்றதோ, அன்றைக்கு வல்லமை பெறுகிறது என்று நான் நம்புகிறேன். நிச்சயமாக என்னுடைய சமூகம் விழிப்பு பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இன்றைக்கு கூட என்னை பார்த்து நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். என்றைக்கு நான் ஊழலை எதிர்க்க தொடங்கிவிட்டேனோ, அன்றைக்கே நான் அரசியலில் இருக்கின்றேன் என்று தான் அர்த்தம். அது தேர்தல் அரசியலா? என்பதை என்னுடைய சமூகம் முடிவு செய்யட்டும், அது முடிவு செய்கின்றபோது, விழித்தெழும்போது நிச்சயமாக ஒரு முடிவு பிறக்கும்' என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments