'தர்மயுத்தம் 2' தொடங்கும் அதிமுக பிரபலம்

Webdunia
ஞாயிறு, 7 ஜூலை 2019 (08:05 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா குரூப்பின் டார்ச்சர் தாங்க முடியாமல் ஜெயலலிதா சமாதி அருகே தர்மயுத்தம் தொடங்கி தனி அணியாகவும் பிரிந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாலர் முகம்மத் ஜான் மற்றும் மேட்டூர் நகர செயலாளர் என்.சந்திரசேகரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில் தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு கிடைக்காத அதிமுகவின் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அதிமுக தலைமை மீது விமர்சனங்களை வைக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அவர் இன்று ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆனால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்தே தேர்வு செய்துள்ளதால் எத்தனை தர்மயுத்தம் நடந்தாலும் இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிகரெட் லைட்டரை தர மறுத்ததால் இளைஞர் படுகொலை! தப்பியோடிய மர்ம நபர்கள்..!

தவெகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?!... அரசியல் பரபர!...

எத்தியோப்பியாவில் 10,000 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை.. டெல்லியை எட்டிய சாம்பல் மேகம்..!

சிறிய அளவில் உயர்ந்த பங்குச்சந்தை.. நேற்று போல் ஏமாற்றம் தருமா?

இன்று ஒரே நாளில் 1600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.94,000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments