மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம் - கனியாமூர் பள்ளி மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (19:13 IST)
கள்ளகுறிச்சி மாவட்டம் கனியாமூர்  தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் மாணவியின் மரணம் தொடர்பாக தனியார் பள்ளி மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய மனித உரிமை ஆணையம் பதிவு செய்து இருப்பதாகவும் விரைவில் இந்த வழக்கின் விசாரணை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
ஒருபக்கம் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை விசாரணை செய்ய உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments