Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தவைத்தியர் வீட்டில் தோண்ட தோண்ட கிடைக்கும் மனித எலும்புகள்: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (18:23 IST)
கும்பகோணம் பகுதியை சேர்ந்த சித்தவைத்தியர் வீட்டில் தோண்ட தோண்ட மனித எலும்புகள் கிடைத்துக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கும்பகோணம் அருகே சோழபுரம் என்ற பகுதியில் அசோக் ராஜன் என்ற இளைஞர் கொலை வழக்கில் சித்த வைத்தியர் கேசவமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இளைஞரின் பிணத்தை தோண்டி எடுக்க காவல்துறை முயற்சித்த போது தோண்ட தோண்ட மனித எலும்புகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அசோக் ராஜனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீட்டின் ஒரு சில பகுதிகளில் புதைத்த நிலையில் வேறு ஏதேனும் உடல் புதைக்கப்பட்டுள்ளதா என காவல்துறையினர் அவரது வீட்டில் அருகே தோண்ட ஆரம்பித்தனர். அப்போது தோண்ட தோண்ட மனித எலும்புகள் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கைதான சித்த வைத்தியர் கேசவ மூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. அவரிடம் நடக்கும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments