Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை குறித்து வானிலை இயக்குனர் சற்றுமுன் அளித்த தகவல்கள்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (12:21 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழக கடலோர பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக நேற்று இந்திய வானியல் துறை அறிவித்தது. இந்த நிலையில் தற்போது வானிலை மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:

 
 
தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் செம்பரப்பாக்கத்தில் 18 செமீ மழையும், விமான நிலையம் பகுதியில் 17 செமீ மழையும் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி நுங்கம்பாக்கத்தில் 12 செமீட், கேளம்பாக்கத்தில் 11 செமீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 15 செமீ மழை பதிவாகியுள்ளது.
 
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments