Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் எத்தனை சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன? எந்தெந்த சுரங்கப்பாதைகள்?

சுரங்கப்பாதை
Siva
புதன், 16 அக்டோபர் 2024 (07:24 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சில சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால், அதே நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அவ்வப்போது சுரங்கப்பாதைகள் மீண்டும் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை நிலவரப்படி, சென்னையில் 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு இருந்த நிலையில், தற்போது மூன்று சுரங்கப்பாதைகள் தவிர மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணேஷ்புரம், ஸ்டான்லி நகர், பெரம்பூர் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், அங்கு மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று சுரங்கப்பாதைகள் தவிர, சென்னையில் மீதியுள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் போக்குவரத்துக்காக உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வப்போது மாநகராட்சி தனது சமூக வலைத்தளத்தில் சுரங்கப்பாதைகள் திறக்கப்படுவதும் மூடப்படுவதுமான தகவல்களை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments