Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் எதிர்ப்பையும் மீறி கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கிடைத்தது எப்படி? பலமான சிபாரிசு காரணமா?

Siva
ஞாயிறு, 24 மார்ச் 2024 (10:55 IST)
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில் அதில் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை தொகுதியை கார்த்தி சிதம்பரத்திற்கு கொடுக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக பிரதமர் மோடியை புகழ்ந்தும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையை விமர்சனம் செய்தும் பேசிய கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் வழங்கினால் தேர்தல் வேலை செய்ய மாட்டோம் என்று ஒரு கோஷ்டி தீர்மானமே இயற்றியது.

அதேபோல் சுதர்சன நாச்சியப்பன், கே ஆர் ராமசாமி ஆகியோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி கார்த்திக் சிதம்பரத்துக்கு சீட் கிடைக்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தான் காரணம் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் டெல்லி தலைமையிடம் கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை சிபாரிசு செய்ததாகவும் அந்த சிபாரிசின் அடிப்படையில் தான் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட்  கிடைத்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும் அவரை தோற்கடித்த காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரே உள்ளடி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

ALSO READ: அமமுக போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு.. திருச்சியில் போட்டி யார்?

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments