கள்ள நோட்டுகளை எந்த வகையில் ஒழிக்க முடியும் என்பது குறித்து பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்த யோசனையை பத்திரிக்கையாளர் ஞானி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ஞானி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
சில மாதங்களுக்கு முன்பு பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உடனான உரையாடலின்போது, சரியான வகையில் பண பரிவர்த்தனையை செயல்படுத்துவது என்பது குறித்து சிறந்த வழிமுறையை அவர்கள் தெரிவித்தனர். மற்ற வணிகப் பொருட்களுக்கும் காலக் கெடு [Expiry date] இருப்பது போல, ரூபாய் நோட்டுக்கும் காலக் கெடு அச்சிடப்பட வேண்டும்.
காலக்கெடு முடியும்போது வேறு நோட்டுக்கள் மாற்றிக்கொள்ளும் வண்ணம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், தவிர்க்க முடியாதபடி பணி பரிவர்த்தனையை கண்காணிக்க முடியும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.