Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்டுப்போன உணவால் சிறுமி உயிரிழப்பு! – உணவக உரிமையாளர், சமையல்காரர் கைது!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:54 IST)
ஆரணியில் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்த வழக்கில் உணவக உரிமையாளர், சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை ஆரணி காந்தி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அசைவ உணவகத்தில் நேற்று முன்தினம் அசைவ உணவு சாப்பிட்ட 12 பேர் வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் கெட்டுபோன உணவு பொருட்களை சேர்த்ததே காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து போலீஸார் உணவக உரிமையாளர் மற்றும் சமையல்காரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments