Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை அறிக்கை..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:12 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று அதிகாலை நடை பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைசுற்றல் ஏற்பட்டது. 
 
உடனடியாக கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பரிசோதனையின் அடிப்படையில் அவர் தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு இருதய ரத்த நாள பரிசோதனை செய்ததில் குறிப்பிட்ட தக்க அடைப்பு எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. 
 
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு இன்று மதியம் இரண்டு பத்து மணி அளவில் மருத்துவமனையில் இருந்து அவர் இல்லம் திரும்பினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments