Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழுகை செய்ய பேருந்தை நிறுத்திய நடத்துனர்.. சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் தற்கொலை..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:07 IST)
பயணிகள் தொழுகை செல்வதற்காக பேருந்து நிறுத்திய நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பரேலி என்ற பகுதியில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் தொழுகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க நடத்துனர் இரண்டு நிமிடம் பேருந்து நிறுத்திச் சொன்னதாக தெரிகிறது.  
 
ஆனால் அதே நேரத்தில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று சில பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில்  கூடுதலாக சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது 
 
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் எந்தவித விசாரணையும் இன்றி நடத்துனர் மோகித் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments