Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல் - மும்பை மாநகராட்சி

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (17:42 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.   

இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரொனாவால் மும்பையில் உள்ள பள்ளிகள் மூடப்படுவதாக மும்பை  மா  நகராட்சி அறிவித்துள்ளது.

அதில், மும்பையில் ஜனவரி 31 ஆம் தேதி  வரை 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடந்து செயல்படும் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கோவா மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூட அம்மா நில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments