Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப்பள்ளியிலும் ஹிந்தி திணிப்பு – வருகைப்பதிவேட்டில் தூக்கப்பட்ட தமிழ் !

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (08:30 IST)
அரசுப்பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டில் இந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசுப்பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக பயோமெட்ரிக் மற்றும் கணினிகள் மூலமாக வருகைப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களது வருகையைப் பதிவு செய்ய விரல் ரேகை பதிவு செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேப்போல பள்ளி முடிந்து செல்லும் போது கைவிரல்களை வைத்து பதிவு செய்த பின்னரே செல்ல வேண்டும்.

இந்த பயோமெட்ரிக் எந்திரங்களில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழிநடத்தும் குறிப்புகள் இடம்பெற்று இருந்தன. ஆனால் இப்போது தமிழ் மொழி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஹிந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சம்மந்தமாக சமூக வலைதளங்களில் வெளியானப் புகைப்படங்களுக்கு கடுமையானக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments