Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு முழுவதும் சட்டப்பேரவையில் தங்கிய எம்.எல்.ஏக்கள்: நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது?

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (06:35 IST)
கர்நாடக சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி இரவு முழுவதும் சட்டப்பேரவையிலேயே தங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி மீதான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையை இன்று காலை 11 மணிக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்
 
மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா தெரிவித்ததால் சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவில்லை என கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடத்துமாறு பாஜகவினர் ஆளுனரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து நேற்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்
 
இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வர் குமாரசாமி ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இருப்பினும் பாஜக எம்எல்ஏக்கள் இரவு முழுவதும் சட்டத்திலேயே தங்கியதால் சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments