Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்று பாடிய வாலிபர்: உயர் நீதிமன்றம் அதிருப்தி

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்று பாடிய வாலிபர்: உயர் நீதிமன்றம் அதிருப்தி
, சனி, 3 செப்டம்பர் 2016 (16:09 IST)
திரைப்படங்களில் வரும் பாடலை பாடி வாலிபர் ஒருவர் சிறுமியை கிண்டல் செய்துள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி திரைப்பட ஆபாச பாடல்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.


சென்னை மணலி பகுதியில் இளைஞர் ஒருவர், சிறுமியை பார்த்து கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்று பாடி கிண்டல் செய்துள்ளார்.

அதற்காக அவர் கைது செய்யப்பட்டு, அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன் கூறியாதவது:-

திரைப்பட துறையினரின் செயல்களுக்கு என்னுடைய அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்படம் போன்ற ஊடகங்கள் இளைய சமுதாயத்தினரின் வலிமையான குருவாக உள்ளது. இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணங்களையும், சமுதாய பொறுப்புகளையும் பதிய வைக்க வேண்டும்.

ஆனால் திரைப்பட பாடல்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது, வன்முறை காட்சிகளை படமாக்குவது போன்ற செயல்களால் நம்முடைய கலாச்சாரத்தை திரைப்படத்துறையினர் சீரழித்து விடுகின்றனர்.

இதன்மூலம் ஒரு நல்ல  சமுதாயத்தை உருவாக்க திரையுலகினர் முன்வர வேண்டும், என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடல் கடந்து சேரனுக்கு எதிர்ப்பு!