Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை: நிபந்தனைகளோடு நீதிமன்றம் ஒப்புதல்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (17:10 IST)
உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளோடு ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

 
 
ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், பிரேத பரிசோதனையை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்த வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்க வேண்டும் என்றும், ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், மனுவை மதியம் 2.15 மணிக்கு விசாரணை செய்வதாகவும் அதுவரை ராம்குமாரின் பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளோடு ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் வழங்கியது. அதற்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனையில் ஈடுபட வேண்டும் என்று கூறியது. அதோடு பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கவும் உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments