Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் மரணம்; நீதிபதியின் கேள்விக்கு சிறைத்துறை மவுனம்!

ராம்குமார் மரணம்; நீதிபதியின் கேள்விக்கு சிறைத்துறை மவுனம்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (16:57 IST)
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மரணமடைந்தார். இவர் சிறையில் உள்ள மின்சார கம்பியை வாய் மற்றும் உடலில் திணித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.


 
 
ஆனால் ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை. இது திட்டமிட்ட கொலை என பலரும் சந்தேகங்களை எழுப்பினர். இந்நிலையில் மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி இன்று காலை புழல் சிறைக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
 
இந்த ஆய்வின் போது மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி சிறைத்துறை அதிகாரிகளிடம் ராம்குமார் மரணம் குறித்து கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்க முடியாமல் சிறைத்துறை அதிகாரிகள் அமைதியாக இருந்துள்ளனர்.
 
சிறைக்காவலர் பேச்சிமுத்து, மற்றும் விசாரணை கைதிகளிடம் விசாரணை நடத்தி சில தகவல்களை மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி குறிப்பு எடுத்துள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதால் இது சிறைத்துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments